யாழ்ப்பாணத்தில் மருத்தகத்தில் நடத்தப்பட்ட இறுத்தி ச்சடங்கு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் அண்மையில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் யாழ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இறுதிச்சடங்கு இடம்பெற்ற மருந்தகத்தை மூடி அங்கிருந்த மருந்துப் பொருட்களை அழிக்குமாறு யாழ்.நீதவான் இன்று (13) உத்தரவிட்டுள்ளார்.

மருந்துப் பொருட்களை அழிக்க உத்தரவு
குறித்த மருந்தகம் ஒரு வீட்டில் நடத்தப்பட்டு, மருந்தகத்தின் உரிமையாளரின் மாமா ஒருவர் இறந்தபோது, ​​அந்த மருந்தகம் இயங்கிய பகுதியில் இரண்டு நாட்கள் உடல் வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இறுதிச்சடங்குக்கு வந்தவர்கள் அங்கேயே தங்கியிருந்தமை தொடர்பில் யாழ்.பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து மருந்தகத்திற்கு சீல் வைத்து மருந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின் குமார் மருந்தகத்தை உடனடியாக மூடிவிட்டு வீட்டிற்கு வெளியே பொருத்தமான இடத்தில் இயங்க அனுமதிக்குமாறு பொது சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை மருந்தகம் ஒன்றில் இறுதிச் சடங்கு இடம்பெற்றதாக செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்கள் மீது மருந்தக உரிமையாளர் குற்றம் சுமத்தியதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.