இலட்சக் கணக்கான நண்டுகள் திடீரென உயிரிழப்பு!

திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இலட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளன.

இன்று (10) அதிகாலை முதல் நண்டுகள் இவ்வாறு இறந்து கரையுங்குவதாக கூறப்படுகின்றது.

சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன.

அதேவேளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.