கனடாவில் போதைப் பொருளுடன் கைதான இலங்கை தமிழர்!

கனடாவில் பெருந்தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ப்ளூ வோட்டர் பாலத்தில் கிட்டத்தட்ட 120 கிலோகிராமுக்கு அதிகமான கொக்கைனுடன் இலங்கையர் கைது செய்யப்பட்டார். 42 வயதுடைய டிரக் சாரதியே வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

பாலத்தில் அவரது ட்ரக் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது, கனடாவில் தடைசெய்யப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கொக்கெய்ன் போதைப்பொருளை விநியோகித்த, உற்பத்தி செய்ததாக இலங்கைத் தமிழர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவரது பிணைப்பத்திரம் 3 மில்லியன் கனடா டொலராக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் கைதான இலங்கையர் மீது விசாரணை தொடர்வதால் மேலும் பல குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.