அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

அதற்கமைய 260 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கீரி சம்பா 248 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 45 ரூபாவினாலும், ஒரு கிலோ வெள்ளைப் பட்டாணியின் விலை 42 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் பச்சைப்பயறு, பச்சைப் பட்டாணி ஒன்றின் விலைகள் 30 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர , காய்ந்த மிளகாய், வெள்ளை அரிசி மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றின் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.