மூச்சு திணறலால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் தற்போது சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினால் மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனவே சிறுவர்களுக்கு காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின் உடனே அருகில் உள்ள வைத்தியரை நாடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் , சிறுவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோரின் கடமை எனவும் வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.