தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள்!

தன்னிச்சையான கிராம உத்தியோகத்தர் சேவை யாப்பு வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கிராம சேவகர்கள் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் சேவை நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.கே.ஜி.ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தமது தொழில்சார் நடவடிக்கையால் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.