பொது மக்களின் உதவி கோரும் பொலிசார்!

13 வயதான சிறுவன் ஒருவர் காணாமயுள்ளதாக தெரிவித்த பொலிஸார் , அவரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த மனோகரன் பிரதீப் என்ற 13 வயதுடைய சிறுவரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் (பிலியந்தலை பொலிஸ் நிலையம் – 071 8591665 மற்றும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் – 011 2614222) என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.