சற்றுமுன் பிணையில் விடுதலையானர் மருத்துவர் அர்ச்சுனா!

மன்னார் நீதிமன்றுக்கு கைவிலங்குடன் அழைத்துவரப்பட்ட மருத்துவர் அருச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று மன்னார் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.