மொட்டு கட்சி வேட்ப்பாளர் தொடர்பான அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் 07 ஆம் திகதி (புதன்கிழமை) அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல தொகுதிக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

இதேவேளை, எதிர்வரும் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீறும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் விடுத்துள்ள கடிதத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதிலளித்துள்ளார்.

ஜூலை 29 அன்று கட்சியின் அரசியல் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தானும் அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களும் கட்டுப்பட்டிருக்கவில்லை என சேமசிங்க எழுத்து மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கிணங்க, அவர்களுக்கு எதிராக கட்சி கோரும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தற்போது நாடு எதிர்நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுத்து சரியான தீர்மானங்களை எடுக்க தயங்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்