பொலிஸாரால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுக்க புதிய நடவடிக்கை!

நகர போக்குவரத்து பிரிவில், பொலிஸ் உத்தியோகத்தர்களின் துன்புறுத்தல்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த முறைப்பாடுகளை 011 243 3333 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என நகர போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய திட்டம்

நகர போக்குவரத்து பிரிவுக்கு உட்பட்ட புறக்கோட்டை, கோட்டை, மருதானை உள்ளிட்ட 53 பொலிஸ் நிலையங்களை மையமாகக் கொண்டதாக இந்த திட்டம் அமையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வத்தளை பிரதேசத்தில் டிப்பர் வாகனத்தின் சக்கரத்தில் காற்றினை வெளியிட்ட பொலிஸ் அதிகாரியின் செயற்பாட்டினை தொடர்ந்தே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.