யாழில் குழந்தையை கொன்ற தாயின் அதிர்ச்சி வாக்கு மூலம்!

யாழ்ப்பாணத்தில் குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடிப்பதால், குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

யாழ்.அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தை நேற்றையதினம் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை இன்று (04-08-2024) மேற்கொள்ளப்பட்ட வேளை, குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை, தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை, உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குழந்தையின் தாயார் மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸார் நடாத்திய விசாரணையில் குழந்தை பால் குடிக்க மறுப்பதால், கைகள் கால்களை திருகியதாகவும், ஆனால் குழந்தையை நான் கொலை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை குழந்தையின் தந்தையையும், குழந்தையை பராமரிக்க வீட்டிற்கு வந்து சென்ற பெண்ணொருவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னரே, நீதிமன்ற உத்தரவின் பேரிலையே குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.