மருத்துவர் அர்ச்சுனாவிற்க்கு விளக்கமறியல்!

மன்னாரில் கைது செய்யப்பட்ட மருத்துவர் அர்ச்சுனாவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மன்னார் – தம்பன்னை குளத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் மருத்துவர் அர்ச்சுனா நேற்று மன்னார் வைத்தியசாலைக்குச் சென்றபோது, அங்குள்ள வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து அவருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணைகளையடுத்து, இன்று வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை,பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை, அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்சுனா விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.