யாழில் போதைப் பொருளுடன் கைதான இளைஞர்!

யாழ்ப்பாணம் (Jaffna) – செம்மணி பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் (02) குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளது.   

மேலதிக சட்ட நடவடிக்கை

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வவுனியா பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

மேலும் இளைஞனிடம் இருந்து 20 கிலோ 175 கிராம் கஞ்சா போதை பொருட்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருட்களையும் , கைது செய்யப்பட்ட இளைஞனையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.