யாழில் சோகம் ஹையேஸ் வாகனத்தால் பறிபோன பெண்ணின் உயிர்!

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் , ஹையேஸ் வாகனம் ஒன்று, வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் விபத்து இன்று (3) இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற இரண்டு பெண்கள் தமது பக்கத்தினால் சென்றுகொண்டிருந்தவேளை, அவர்களை முந்திச் செல்ல முயன்ற ஹையேஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் இருவரும் காயமடைந்தனர்.

காயமடைந்த பெண்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் சங்கானையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆனந்தன் சிவானந்தகௌரி என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை நாளை ஆடி அமாவாசை தினம் என்பதனால் மக்கள் அதிகள்வில் நடமாட்டம் உள்ளதுடன் வீதிக்கு அருகேயும் மோட்டார் சைக்கிளகள் நிறுத்திவைக்கபட்டமையும் விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.