இந்திய வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய கம்பீர்

இலங்கைக்கு எதிரான ரி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது.

இதனை தொடர்ந்து உடை மாற்றும் அறையில் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) வீரர்களிடையே சிறிது நேரம் உரையாற்றினார்.

இதன்போது, போர்குணத்துடன் வெற்றிக்காக போராடினால் நிச்சயம் இப்படித்தான் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்றும் இதே போல் தொடர்ந்து வெற்றிக்காக போராட வேண்டும் என்று கம்பீர் கூறியிருந்தார்.

திறமை மற்றும் உடற் தகுதி

மேலும், சில வீரர்கள் ஒரு நாள் தொடரில் ஆடப்போவதில்லை. அவர்களுக்கு நீண்ட விடுமுறை கிடைக்கும்.

பங்களாதேஷ் தொடருக்கு அவர்கள் திரும்ப வரும்போது அவர்களது திறமை மற்றும் உடற் தகுதி உச்சத்தில் இருக்க வேண்டும்.

அந்தத் தொடருக்கு நீங்கள் நேரடியாக வந்து, நாம் சிறப்பாக செயல்படலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள்.

எனவே, நீங்கள் உங்கள் உடற் தகுதியை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். எப்போதுமே பயிற்சியாளர்கள் உடை மாற்றும் அறையில் பேசும்போது அணியின் தலைவரைதான் பேச அழைப்பார்கள்.

ஆனால் நேற்று கம்பீர், சூர்யகுமாரை அழைக்காமல் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) தற்போது உங்களிடம் உரையாற்றுவார் என்று கூறினார்.

கீழ் வரிசை வீரர்கள்
கம்பீர் கூறுவது போல அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடி இந்த வெற்றியை பெற்றிருக்கின்றோம் என ஹர்திக் பாண்ட்யா கூறினார்.