முல்லைத்தீவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு – பாண்டியன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்தியிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன்போது மல்லாவி பகுதியை சேர்ந்த சசி என்பவரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை

இதேவேளை அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பாண்டியன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.