ஆட்டோ சாரதி ஒருவர் ஹெரோயினுடன் கைது!

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொலகொட பிரதேசத்தில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட்ட போது, ​​அதன் சாரதியிடம் இருந்து 31 கிராம் 460 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வலகம தெற்கு, தெவலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.