வனத்துறை காரியாலய அதிகாரிகள் மீது தாக்குதல்!

கிளிநொச்சி – பூநகரி வனத்துறை காரியாலய அதிகாரிகள் இருவரை அப்பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் மரக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகின்றது.

தாக்குதலில் காயமடைந்த இருவர் பூநகரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மது அருந்திவிட்டு தாக்குதல்
பூநகரி பிரதேசத்தில் காடுகளை வெட்டியமை தொடர்பாக சில மாதங்களுக்கு முன் கைதுசெய்யப்பட்ட ஒருவர் மது அருந்திவிட்டு வன காரியாலயத்தின் யன்னல்களை உடைத்து அரச உடமைகளுக்கு சேதம் விளைவித்ததாக பொலிஸாருக்கு முறப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்படி தாக்குதல் நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.