தம்மிக்க நிரோஷன கொலை சம்பவம் ஒருவர் கைது!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தம்மிக்க நிரோஷனை கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜொன்டி என அழைக்கப்படும் தம்மிக்க நிரோஷன கடந்த செவ்வாய்க்கிழமை (16) அம்பலாங்கொடை கந்த பகுதியில் அவரது வீட்டிற்கு முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் பல தகவல்களை வௌிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.