வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை!

பண்டாரவளை -எல்ல பிரதேசத்திற்கு சென்ற வெளிநாட்டு பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் விடுதி உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்லாந்து நாட்டை சேர்ந்த 26 வயதான பெண்ணொருவரே உடலியல் துஷ்பிரயோகத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி, குறித்த பெண், எல்ல நகரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பிந்து என்ற சுற்றுலா வழிகாட்டிக்கு சொந்தமான விடுதியில் இணையம் மூலம் அறையொன்றை முன்பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த வெளிநாட்டு பெண் மது அருந்தியிருந்த, போதே, விடுதியின் உரிமையாளர், உடல் ரீதியாக பலாத்காரத்துக்கு உட்படுத்தியுள்ளார்

இரவு ஒன்பது மணியளவில் சந்தேக வெளிநாட்டு பெண் மது அருந்தியுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் உடலில் மசாஜ் செய்வதற்காக மூன்று எண்ணெய் போத்தல்களுடன் வந்து மசாஜ் செய்ய விரும்புவதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார்.

இதன்போது சந்தேக நபர் உடலில் மசாஜ் செய்வதற்காக மூன்று எண்ணெய் போத்தல்களுடன் வந்து மசாஜ் செய்ய விரும்புவதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பின்லாந்தைச் சேர்ந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய 41 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.