மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்!

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையில் (G.C.E A/L Exam) சித்தியடைந்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு (Ministry Of Education) தெரிவித்துள்ளது.

அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்காக உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படவுள்ளது.

08 இலட்சம் ரூபாய்

அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்காத உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்காக இந்த வட்டியில்லாக் கடன் திட்டம், 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், அதிகபட்சமாக 08 இலட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 17 அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் 100 பட்டப்படிப்புகளை கற்பதற்கு ஏழு மாணவர் குழுக்களின் கீழ் உள்ள 17,313 மாணவர்களுக்கு ஏற்கனவே கடன் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.