வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டார் வைத்தியர் அர்ச்சுனா!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் வடக்கு சுகாதரத் துறைக்குள் உள்ள பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் அவருக்கு மத்திய சுகாதார அமைச்சினால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்காக செல்வதாக வைத்தியர் அர்ச்சுனா மக்களுக்கு தெரிவித்தார்.

அவரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்துச் செல்லும்போது மக்கள் அவரை செல்ல விடாது தடுத்தனர்.

இருப்பினும் மக்களது எதிர்ப்பின் மத்தியிலும் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

இரண்டாம் இணைப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களுக்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்.

வீதியோரத்தில் உட்கார்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவ்விடத்திலிருந்து எழுப்பியுள்ளனர்