ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி!

சில துறைகள் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, மின்சார விநியோகம், கனியவள உற்பத்தி மற்றும் பகிர்ந்தளித்தல் என்பன தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.