இலங்கையின் மதுப் பிரியர்களுக்கான அதிர்ச்சி தகவல்!

கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் 17 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, நாளை முதல் ஜூலை 22ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.