ரணிலுடன் இணைந்த மொட்டுக் கட்சியின் ஆதரவாளர்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) முக்கிய ஆதரவாளரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு நகரசபையின் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான மகிந்த கஹந்தகம (Mahinda Kahandhagama) ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

சிறிகொத்தவில் இன்று (03) அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.

கட்சி அரசியல்

இது தொடர்பில் அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது, கட்சி அரசியல், இனவாதம், நிறவெறி போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு, இந்த நாட்டை வெல்லமுடியாத நாடாக மாற்ற அதிபருடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கொழும்பில் 2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி அன்று இடம்பெற்ற வன்முறையின் போது, போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட முக்கியமானவர்களில் இவரும் ஒருவர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.