ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் பிணை மனு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை சவால் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

உத்தரவு
இந்த பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​ஜூலை 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தலைமை சட்ட ஆலோசகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடையில் கடத்தப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட அமில பிரியங்கரவை அச்சுறுத்தல், தாக்குதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகளில் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.

தண்டனை
இந்த வழக்கில் ஹிருணிகா பிரேமச்சந்திர ஒன்பதாவது குற்றவாளி ஆவார்.

மேலும் நீதிமன்றம் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது 20,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.