கொழும்பு ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயிலின் மீது தெமட்டகொடை பகுதியில் வைத்து கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) மாலை 6.40 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ரயிலில் அதிக பயணிகள் பயணித்துக் கொண்டிருந்ததோடு, கல் வீச்சுத் தாக்குதலினால் ரயிலின் யன்னல் மற்றும் கதவு சேதமடைந்துள்ளன.

எனினும் கல் வீச்சுத் தாக்குதலையும் மீறியும் ரயில் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டதாகவும் கூறப்படும் நிலையில், கல் வீச்சுக்கான காரணம் வெளியாகவில்லை.