கணவனுடன் இணைந்து பாடசாலை ஆசிரியர் மேற்கொண்ட மோசமான செயல்!

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார் எனக் கூறப்படும் அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியையே இவ்வாறான செயலில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றையதினம் (24) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியை தனது கணவருடன் இணைந்து ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் விற்பனைக்காக வைத்திருந்த ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆசிரியையும், அவரின் கணவரும் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.