நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (26) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

“எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிட்டவுள்ளது.

பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனா உட்பட இலங்கைக்குக் கடன் செலுத்துநர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். இது சம்பந்தமாக 26 ஆம் திகதி மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீளவுள்ளது.

எனவே, நிதி ஒதுக்கத்துடன், சிறந்த திட்டங்களுடன் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்றார்.