வெளிநாடு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றிக்குள் புகுந்து மர்ம நபர்கள் தங்க நகைகள் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்.அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் வீட்டார் வீடு திரும்பிய போதே, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வீட்டார் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.