நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு விதித்திருந்த தடையுத்தரவை மேலும் நீடிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றம் இன்று (25) குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் லசந்த அழகியவண்ணவினால் (Lasantha Alagiyawanna) இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தடையுத்தரவு நீடிப்பு
குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​எதிர்மனுதாரர்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருந்தது.

இதனையடுத்து ஜூலை 9 ஆம் திகதி முறைப்பாட்டை மீண்டும் அழைப்பதற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அதுவரை பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவை நீடிப்பதற்கும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.