மாணவி கூட்டு வன்புணர்வு நீதிமன்றத்தின் உத்தரவு!

ஹன்வெல்ல, ஜல்தர பிரதேசத்தில் 16 வயது மாணவியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெண்ணின் காதலன் உட்பட 8 இளைஞர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (24) ஹோமாகம பதில் நீதவான் பத்மசிறி ஜயவர்தன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கற்பழிப்பு, வலுக்கட்டாயமாக தடுத்து வைத்தல், கடத்தல் உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக ஹங்வெல்ல பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.-