30 வருடமாக கடமை புரிந்த பேருந்தை வணங்கி விடை பெற்ற சாரதி!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் திருகோணமலை சாலையில் சுமார் 30 வருடமாக சாரதியாக கடமையில் ஈடுபட்டுவந்த s. சாலிய குணசேகர என்பவர் கடமையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.

இவ்வாறான நிலையில் தான் கடமை செய்த NC – 2171 பேருந்தை மனமுருகி பணிந்து வணங்கும் காட்சி கண்கலங்க செய்துள்ளது.