யாழில் பாம்பு தீண்டியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்ட சென்ற போது, புடையன் பாம்பு தீண்டியுள்ளது.

அதனை அடுத்து யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.