பொலிஸ்மா அதிபர் தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

அதன்படில் எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இன்று (19) குறித்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 8 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.