யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கேரள கஞ்சா தொகையுடன் வடக்கு கடல் பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் 34 மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
இதன்போது அவர்களிடம் இருந்து 70 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் இதன் பெறுமதி சுமார் 28 மில்லியன் ரூபாய் என கடற்படை தெரிவித்துள்ளது.

கேரள கஞ்சாவை டிங்கி படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை மற்றும் டிங்கி படகும் மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது