பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும்.

மேலும், சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31ஆம் திகதி முடிவடைகிறது.

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை (06-05-2024) நடைபெறவுள்ளதால் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.