யாழில் கரையொதுங்கிய கேரள கஞ்சா

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் 84 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா நேற்று (08) விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டது.

பருத்தித்துறை – வல்லிபுரம் காட்டுப் பகுதியிலேயே குறித்த போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

மீட்புச் சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படாத நிலையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.