விவசாயிகளுக்கான அறிவித்தல்!

பெரும்போக நெற்செய்கைக்காக நிலத்தை தயார்ப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எதிர்வரும் பெரும்போகத்திற்காக கால்வாய்களை தூய்மைப்படுத்தல், வாய்க்கால்களை தூர் வாருதல், களைகளை பிடுங்குதல் மற்றும் நிலத்தை தயார்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு அறிக்கை ஒன்றின் ஊடாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விவசாயிகளை தெளிவுபடுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விவசாய திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.